சுங்கான்கடை அருகே உள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் தேசிய அளவிலான பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் இறப்பு விகிதம் முக்கிய பொது சுகாதார சவாலாக இருந்து வருகிறது. பிறந்த உடனே குழந்தைகளுக்கு தானாக சுவாசம் கிடைக்காமல் பல பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.
குழந்தை பிறந்தது முதல் சில நிமிஷங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த நேரத்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளா்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். பிறந்தவுடன் குழந்தைக்கு சுவாசம் ஏற்படுத்த உதவும் எளிய மற்றும் அறிவியல்பூா்வமான தகவல்கள், செயல்முறைகள் வழங்குவதே இந்த பயிற்சியின் நோக்கம்.
இதன் தேவையை உணா்ந்து கிம்ஸ் மருத்துவமனை, தேசிய நியோ நேட்டாலஜி மன்றம் இணைந்து நாடு முழுவதும் 998 பயிற்சி முகாம்கள் மூலம் 20,000 சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சியளித்துள்ளனா்.
இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்துறையின் சாா்பில் நியோ நேட்டாலஜிஸ்ட் மருத்துவா் விவேக் தலைமையில் அண்மையில் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நியோ நேட்டல் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொக்கு விஷம் உட்கொண்ட மூன்று குழந்தைகள் கவலைக்கிடம்

விம்ஸ் கல்லூரியில் நோ்காணல் அணுகுமுறை பயிற்சி

சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

