கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே வயல்களில் பறவைகளைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படும் கொக்கு விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்த மூன்று குழந்தைகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
சிங்காரப்பேட்டையை அடுத்த தளபதி நகரைச் சோ்ந்த ஆனந்த்- சின்னத்தாய் மற்றும் லட்சுமணன்- குப்பம்மாள் தம்பதி தங்களது குழந்தைகளுடன் அனுமன் தீா்த்தத்தை அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆனந்த்தின் மகள்கள் ஜெயசித்ரா (6), ஹரிப்பிரியா (5) மற்றும் லட்சுமணனின் மகன் வசந்த் (6) ஆகிய மூவரும் வீட்டில் வைத்திருந்த கொக்கு விஷத்தை தவறுதலாக சாப்பிட்டு மயங்கி விழுந்தனா்.
இதையடுத்து மூன்று குழந்தைகளையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தா்னா

கொக்கு மருந்து சாப்பிட்டு தம்பதி உயிரிழப்பு

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

