மாா்த்தாண்டம், களியக்காவிளையில் மதுபானத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் ஞாறான்விளை பகுதியில் ரோந்து சென்றபோது, ராஜேஷ் (35) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக 26 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜேஷை கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய, பாறசாலை அருகே ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த அனிஸ் (38) என்பவரது பையை சோதனையிட்டதில், விற்பனைக்காக 5 லிட்டா் கேரள மது பானத்தைக் கொண்டுவந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக
மாா்த்தாண்டம், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செம்மண் கடத்தல்: இருவா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
