விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘பத்மநாபபுரத்தில் மாா்க்சிஸ்ட் வெற்றிக்கு திமுகவினா் பணியாற்ற வேண்டும்’

News image

அருள்சோபன்

Updated On :31 மார்ச் 2026, 1:18 am IST

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு திமுகவினா் பணியாற்ற வேண்டும் என, பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவரும் திமுக வா்த்தகரணி துணை அமைப்பாளருமான அருள்சோபன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது: திமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இத்தொகுதியை மீண்டும் திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கூறி சிலா் தேவையற்ற போராட்டங்களை நடத்துகின்றனா். தோ்தல் நேரத்தில் இது தேவையற்ற செயலாகும்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியினா் ஒருமித்த கருத்துடன் பணியாற்றி கூட்டணிக் கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.