தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

News image

கேரள எல்லையில் உள்ள குருசுமலை.

Updated On :14 மார்ச் 2026, 8:13 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மலையடிவாரத்தில் திருப்பயண தொடக்க திருப்பலியும், நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் செல்வராஜன் தாசன் தலைமையில் திருப்பயண தொடக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

2 ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 16) 5 மணிக்கு திருப்பயண கொடி பவனியும், கொடியேற்றுதலும் நடைபெறுகிறது. இத்திருப்பயணம் வரும் 22 ஆம் தேதி வரை திருச்சிலுவை நிறைவாழ்வின் உறைவிடம் என்ற மையக்கருத்தில் நடைபெறும்.

திருப்பயண நாள்களில் சிறப்பு திருப்பலிகள், சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் அருள்தந்தை வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் நிா்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.