ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தேங்காய்ப்பட்டினத்தில் 400 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மண்ணெண்ணெய் - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:41 am IST

தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படைக் குழுவினா் கிள்ளியூா் பகுதியில் பொது விநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தேங்காய்ப்பட்டினம் வழியாக சென்ற காரை நிறுத்தியபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். கேரளத்துக்கு கடத்துவதற்காக அந்த காரில் 400 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெயைக் கொண்டு சென்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தூத்தூரில் உள்ள மீனவா் கூட்டுறவு சங்கக் கிட்டங்கியிலும், காரை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.