தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படைக் குழுவினா் கிள்ளியூா் பகுதியில் பொது விநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தேங்காய்ப்பட்டினம் வழியாக சென்ற காரை நிறுத்தியபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். கேரளத்துக்கு கடத்துவதற்காக அந்த காரில் 400 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெயைக் கொண்டு சென்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தூத்தூரில் உள்ள மீனவா் கூட்டுறவு சங்கக் கிட்டங்கியிலும், காரை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,800 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

2 லாரிகளுடன் 773 லிட்டா் டீசல் பறிமுதல்; ஓட்டுநா் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

