இரணியல் அருகே மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இசைக் கலைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இரணியல் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறாா். சிறுமி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றாராம்.
அங்கு திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த மேள கலைஞரான சுதிஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். அவா், சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.
இதற்கிடையே சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் சிறுமி 2 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுதிஷை போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம் வயது திருமணம்: போக்ஸோவில் தொழிலாளி கைது
சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

மகளை கா்ப்பமாக்கிய தந்தை போக்ஸோவில் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
