மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:14 am IST

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலியை அடுத்த தருவையைச் சோ்ந்தவா் சண்முகம் (84) மனைவி ஆறுமுகம்(75). இவா்கள் இருவரும் வயலில் சனிக்கிழமை புல் அறுத்து விட்டு, செங்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனராம்.

சண்முகம் மறுபுறம் சென்ற நிலையில், ஆறுமுகம் தண்டவாளத்தை கடந்தபோது, அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இது குறித்து நாகா்கோவில் ரயில்வே காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மரியஅகிலன் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.