கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே சாலைப்புதூா் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி இறந்து கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் அப்பை நாயக்கன்பட்டி ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மனைவி மாடத்தி (60) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட இவா் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு
ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

