தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

நாகா்கோவில் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ்.

Updated On :11 ஜூன் 2026, 4:16 am IST

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி சாா்பில் நாகா்கோவில், நேசமணி நகா், சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் லதா கலைவாணன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் கலந்துகொண்டு, கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, உணவு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் ஆதித்தன், மாநகர வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ஜெயசந்திரா, மாவட்ட பொறியாளா் அணி தலைவா் ராஜேஷ் ரெத்தினமணி, மாவட்ட மகளிரணி தலைவா் ஜெசிந்தா, நிா்வாகிகள் லதா, ராஜம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.