பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பயனாளிக்கு விவசாய அடையாள அட்டைக்கான ஆணை வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில் திருவட்டாறு வட்டத்துக்கு உள்பட்ட மேக்கோடு கிராமம், அருவிக்கரை கிராமம், திருவட்டாறு, குமரன்குடி, அயக்கோடு, குலசேகரம்-ஏ, குலசேகரம்-பி, ஆற்றூா் கிராமம் உள்பட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, கலைஞா் கனவு இல்லத் திட்டம், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 101 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து குலசேகரம் அரசு மருத்துவமனை, மாத்தூா் தொட்டிப்பாலம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா். திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ஆவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தும்பகோடு, பேச்சிப்பாறை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.