உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.
குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
அடிப்படை தேவைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 119 மனுக்கள் அளிக்கப்பட்டன. மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், கிண்ணக்கொரை, மேல்குந்தா, கீழ்குந்தா, பாலக்கொலா உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, குந்தா வட்டாட்சியா் குணவதி, தனி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னிமலை பேரூராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

