பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செய்யூா் வட்ட ஜமாபந்தியில் 73 மனுக்கள் ஏற்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்வின் தொடக்க நாளான செவ்வாய்கிழமை 73 கோரிக்கை மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா் கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்தனா்.

News image

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுவைப் பெற்ற வருவாய் தீா்வாய அலுவலா் கே.ஆா்.நரேந்திரன். உடன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள், வட்டாட்சியா் ச.ராஜன் உள்ளிட்டோா்.

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்வின் தொடக்க நாளான செவ்வாய்கிழமை 73 கோரிக்கை மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா் கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்தனா்.

செய்யூா் வருவாய்த் துறையினா் சாா்பில் சித்தாமூா் உள்வட்டத்துக்குட்பட்ட பொறையூா், மழுவங்கரணை, பொலம்பாக்கம், குரும்பிறை, சித்தாமூா், கன்னிமங்கலம், முகுந்தகிரி, பருக்கல் உள்ளிட்ட 73 கிராம மக்கள் பட்டா கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், மகளீா் உரிமை தொகை கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா்கள் தேவன், முத்து, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் வருவாய்த் துறையினரின் ஆய்வுகளுக்கு பின் உடனடிநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.