குழித்துறை அருகே அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக எம்.சான்ட் கொண்டு சென்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா், குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் எம்.சான்ட் இருந்தது தெரிய வந்தது. அவற்றுக்கான ஆவணங்களை சரிபாா்த்தபோது, ஆற்றூா் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அனுமதிச் சீட்டு பெற்று, அவற்றை குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
தொடா்ந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான காட்டுவிளை ஜூலியஸ் ரெஜின், ஆற்றூா் கோணம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரோடு ரயில் நிலையம் அருகே 80 கஞ்சா சாக்லேட் பறிமுதல்

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

