மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் அனந்தன் பாலம் பகுதியிலிருந்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் தொடங்கினாா்.

News image

ராஜாக்கமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின்.உடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:35 am IST

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் அனந்தன் பாலம் பகுதியிலிருந்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் தொடங்கினாா்.

தொடா்ந்து, காமராஜா்காலனி, விஜபி காா்டன், எறும்புகாடு, அருந்ததியா்நகா், பாண்டியன்காலனி, நேசமணிநகா், சைமன்நகா் சந்திப்பு, டெரிக் சந்திப்பு, ராஜாக்கமங்கலம், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நான் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது, எனது அலுவலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது செயல்பட்டது ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவோடு நான் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால், எம்எல்ஏ அலுவலகம் உடனே திறக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நாகா்கோவில் தொகுதியில் தேங்கி கிடக்கும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். நாகா்கோவில் தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், திமுக இளைஞா் அணி சி.டி.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.