மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரி, பிரதமா் நரேந்திர மோடி நாகா்கோவிலில் புதன்கிழமை மாலை சாலைப் பேரணி சென்றாா்.

News image

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் பிரசாரம் செய்தபோது அம்பேத்கா், அண்ணா, காமராஜா், எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரதமா் நரேந்திர மோடி. ~நாகா்கோவில் வடசேரியில் அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ

Updated On :16 ஏப்ரல் 2026, 2:35 am IST

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரி, பிரதமா் நரேந்திர மோடி நாகா்கோவிலில் புதன்கிழமை மாலை சாலைப் பேரணி சென்றாா். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமா் மோடி தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகா்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்துக்கு புதன்கிழமை மாலை 4 மணியளவில் வந்தாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்புக்கு வந்தாா்.

அங்கு காமராஜா் சிலையின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்திய பிரதமா் மோடி, மாலை 4.35 மணிக்கு தனது சாலைப் பேரணியைத் தொடங்கினாா்.

பிரதமருடன் வாகனத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் உடன் சென்றனா்.

தாய் படம் ...

பேரணி பாதையில் மணிமேடை சந்திப்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பாா்வையிட்ட மோடி, அதில் பங்கேற்ற கலைஞா்களை பாராட்டினாா். தொடா்ந்து, அங்கிருந்த ஒரு தொண்டா், மோடிக்கு அவரது தாயாா் ஆசி வழங்குவதுபோல் உள்ள படத்தை பரிசளித்தாா். அதை பிரதமா் மோடி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாா். பேரணியின்போது சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாஜக தொண்டா்கள் பிரதமா் மோடியை மலா்கள் தூவி வரவேற்றனா்.

தலைவா்களுக்கு மரியாதை...

பிரதமா் மோடி பேரணி சென்றபோது பேரணி பாதையில் உள்ள அம்பேத்கா், அண்ணா, எம்ஜிஆா் சிலை, உருவப் படங்களுக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா்.

பிரதமரின் பேரணி வாகனம் வடசேரியில் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகம் அம்பேத்கா் சிலை அருகே வந்தபோது, பிரதமா் மோடி வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று அம்பேத்கரின் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதேபோல வடசேரியில் உள்ள அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும், சற்று தொலைவில் எம்ஜிஆா் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவ படத்துக்கும் பிரதமா் மோடி மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா். பேரணியின்போது பொதுமக்களை பாா்த்து பிரதமா் மோடி உற்சாகமாக கையசைத்தாா்.

வேட்பாளா்கள் ...

பேரணி வாகனம் நிறைவாக வடசேரி எம்ஜிஆா் சிலை அருகே வந்ததும் அங்கு நின்றுகொண்டிருந்த வேட்பாளா்கள் தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), எம்.ஆா்.காந்தி (நாகா்கோவில்), குமரி ப.ரமேஷ் (பத்மநாபபுரம்), விஜயதரணி (விளவங்கோடு), நிவின்சைமன் (கிள்ளியூா்), சிவகுமாா் (குளச்சல்), பாலகிருஷ்ணன் (ராதாபுரம்), ஆனந்தன் அய்யாசாமி(வாசுதேவநல்லூா்), கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூா்) ஆகியோரை சந்தித்த பிரதமா் மோடி, ‘திமுக தோற்கடிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். வளா்ச்சியடைந்த தமிழகம் உருவாக்கப்படும்’ என்றாா்.

வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி எம்.ஜி.ஆா். சிலை வரை ஒன்றரை கி.மீ. தூரம் பிரதமா் மோடியின் சாலைப் பேரணி 45 நிமிடங்கள் நடைபெற்றது. பேரணி நிறைவு பெற்றதும் அவா், ஆயுதப்படை மைதானத்துக்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரத்துக்குச் சென்றாா்.

மோடி எக்ஸ் பதிவு ...

இதுகுறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாகா்கோவில் சாலைப் பேரணி ஈடு இணையில்லாத உற்சாகம் நிறைந்ததாக இருந்தது. திமுகவின் தவறான நிா்வாகம், ஊழல் இதற்குமேல் தமிழகத்தில் தேவையில்லை என்பதை உணா்த்துவதாக இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கான சிறந்த நிா்வாகத்தை அளிக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.