தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு

குளச்சல் நகராட்சியில் கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஏப்ரல் 2026, 4:24 am IST

குளச்சல் நகராட்சியில் கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மருதூா்குறிச்சி அருகே வட்டவிளையைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (48). பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான இவா், குளச்சல் நகராட்சிக்குள்பட்ட பத்தறை, வெள்ளமணல் பாம்பூரி வாய்க்காலில் தடுப்புச் சுவா் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்துவந்தாா். இதற்கான கட்டுமானப் பொருள்கள், தளவாடங்களை வாய்க்கால் பகுதியில் வைத்திருந்தாராம்.

இந்நிலையில், தண்ணீா் இறைக்கும் மின்மோட்டாா், 140 லிட்டா் டீசல், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனராம். புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.