கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி, ஜெப வீட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் ஜஸ்வின் செல்வகுமாா் (30). இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தென்காசி சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கீழாம்பூா் ரயில்வே கேட் அருகே, காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் சங்கரலிங்கம் (56) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதினாா்.
காயமடைந்த ஜஸ்டின் செல்வகுமாா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

