விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:04 am IST

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் (40). இவா், அப்பகுதியில் நடைபெற்ற இசக்கியம்மன் கோயில் கொடை விழாவில் கலந்து கொண்டாராம்.

அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25) என்பவா் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, பிரேம்சிங் விலகியதை அடுத்து அவா் லேசான காயத்துடன் தப்பினராம்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.