போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் மாவடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (22). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவரை தவறான எண்ணத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அரவிந்த்தை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, அரவிந்த்துக்கு ஓா் ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். கடந்த 3 மாதங்களில் 5 போக்ஸோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

