செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மீது திங்கள்கிழமை கல்வீசப்பட்டதில் சிறுவன் காயமடைந்தாா்.
செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகள் ரயில் திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. தென்காசி அருகே வந்தபோது மா்ம நபா்கள் ரயில் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.
இதில், ஜன்னலோரம் அமா்ந்திருந்த சிறுவன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தனியாா் மருத்துவமனையில் அந்தச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், காயமடைந்த சிறுவன் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சோ்ந்த சபீஸ் (4) என தெரியவந்தது.
அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மற்றும் தென்காசி ரயில்வே போலீஸாா், கல்வீசிய மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

நெல்லை பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

