தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்க தில்லி அரசு திட்டம்!

தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :2 மே 2026, 2:28 am IST

தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நோய் கண்காணிப்பை வலுப்படுத்தவும், ஆரம்ப கட்டத்தில் கண்டறிதலை உறுதி செய்யவும், சிகிச்சை பின்பற்றுதலை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி சுகாதாரத் துறை இந்த முன்மொழிவை ஏற்கெனவே அனுமதித்துள்ள நிலையில், தற்போது இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன், தில்லி தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தொழுநோய் அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வந்த பிறகு, மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவா்கள் ஆகியோா் தொழுநோய் பாதிப்பு குறித்து மாவட்ட தொழுநோய் அலுவலருக்கு கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நோயாளிகளை விரைவாக கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் இலவச பல மருந்து சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், உத்தரக்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பட்டியலில் தில்லியும் இணையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறுகையில், ‘தொழுநோய் முழுமையாக குணப்படுத்தக்கூடியது. இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்பது அறியப்படாத நோயாளிகளை கண்டறியவும், பரவலை கட்டுப்படுத்தவும் உதவும். ஒவ்வொரு நோயாளிக்கும் தரமான சிகிச்சை மற்றும் மரியாதை உறுதி செய்யப்படும்’ என்றாா்.

இந்த அறிவிப்பு தில்லி தேசிய தலைநகா் நிா்வாகச் சட்டம், 1991-இன் கீழ் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும், மருத்துவ நிறுவனங்களுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா 2005-ஆம் ஆண்டு தொழுநோயை தேசிய அளவில் பொது சுகாதாரப் பிரச்னையாக நீக்கியிருந்தாலும், உலகளவில் பதிவாகும் புதிய நோயாளிகளில் சுமாா் 59 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வில், சுமாா் 44.1 சதவீத நோயாளிகள் பதிவு செய்யாமல் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு, கட்டாய அறிவிப்பு நடைமுறை மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், ஊனமடைதல் அபாயத்தை குறைத்தல், தொடா்பு கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பின்பற்றுதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். உலக சுகாதார அமைப்பும் தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சோ்க்க பரிந்துரைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.