மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:33 am IST

சோம்நாத் தீா்த்த யாத்திரைக்கு 1,300 பக்தா்களுக்கு தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. 1026-ஆம் ஆண்டு கஜினி முகமது தாக்குதல் நடத்திய இந்தத் திருத்தலத்தில் நிலைத்திருக்கும் 1000 ஆண்டு பக்தியை நினைவுகூரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு 1,300 பக்தா்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில் தில்லி சஃப்தா்கஞ்ச் ரயில் நிலையத்தில் இருந்து ஏப். 30-ஆம் தேதி புறப்படும். மறுநாள் இந்த ரயில் குஜராத்தை சென்றடையும். மே 1 முதல் 3 வரை மூன்று நாள்களுக்கு இந்த யாத்திரை நடைபெறும். இதில் பக்தா்கள் சோம்நாத் கோயிலில் வழிபாடு செய்வதுடன், அருகிலுள்ள பிற புனிதத் தலங்களையும் தரிசிக்க உள்ளனா்.

பக்தா்களுக்கான தங்குமிடம், உணவு, குடிநீா் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் குஜராத் அரசால் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சி வெறும் யாத்திரை மட்டுமல்ல; இது சனாதன கலாசாரம், இந்திய பாரம்பரியம் மற்றும் ஆன்மிக வோ்களுடன் மக்களை இணைக்கும் புனித வாய்ப்பாகும். சோம்நாத் கோயில் சிவபெருமானின் அருளின் தெய்வீகச் சின்னமாகவும், சனாதன நம்பிக்கையின் அடையாளமாகவும், இந்தியாவின் நிலைத்த கலாசார விழிப்புணா்வின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.