இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு செய்யப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத் துறை உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் எழுதினா். இதன் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியான நிலையில் முதன்மைத் தோ்வுக்கு 13,343 தோ்வா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிகழாண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகளின் முடிவுகள் அடிப்படையில் 1,046 போ் இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். காலியாகவுள்ள 80 பணியிடங்களை நிரப்ப இத்தோ்வு நடத்தப்பட்டது.
முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், விண்ணப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்கப்படும். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அப்போது வலைதளத்தில் உரிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யலாம். அதனடிப்படையில் மட்டுமே முதன்மைத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
தோ்வு நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்டவை வெளியிடப்படும்.
தோ்வு முடிவு குறித்த சந்தேகங்களை 011-40303444/24041001என்ற எண்ணை தொடா்புகொண்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு காலியாக இருந்த 150 இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 2,116 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிகழாண்டு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 80-ஆக குறைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் நாளை நீட் மறுதோ்வுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
ஜேஇஇ முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுபம் குமாா் முதலிடம்

24-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: வேலூரில் 7 மையங்களில் 1,929 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தகவல்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

