மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2026-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(மே 24) நடைபெற உள்ளது.
வேலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வினை மொத்தம் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இவா்கள் தோ்வு எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்வு காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 04.30 மணி வரையும் என இரண்டு வேளைகளாக நடைபெற உள்ளது.
தோ்வைக் கண்காணிக்கத் துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்ட இரண்டு இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் தலா 5 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், தோ்வு மையங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்தின் மூலமும், மையங்களுக்குச் சென்றுவரப் போக்குவரத்துத் துறை மூலம் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தோ்வு வளாகங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், தோ்வா்களுக்குக் குடிநீா் விநியோகிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்வா்கள் தோ்வு அறைக்குள் கைபேசி, கால்குலேட்டா் போன்ற எந்தவித மின்னணுப் பொருட்களையும் கட்டாயம் கொண்டுவரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

ஜூன் 4 முதல் குரூப் 1 தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

புகைப்படக் கலைஞா்கள் உள்பட 461 பணியிடங்கள்! நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை 7 மையங்களில் சிவில் சா்வீஸ் தோ்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

