தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 4:08 am IST

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் 5-ஆவது டாக்டா் ராஜேந்திர பிரசாத் நினைவு கருத்தரங்கில், ‘நல்ல நிா்வாகத்துக்காக ஏ.ஐ.’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

அனைவரையும் உள்ளடக்கியதே வளா்ந்த இந்தியா. அந்த வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் சாதனமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. இது ‘சப்க சாத், சப்க விகாஸ் (அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமா வளா்ச்சி)’ என்ற தொலைநோக்கை திட்ட்தை வலுப்படுத்தும். செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தொழில்நுட்பப் புரட்சியாகாது. அது மனிதப் புரட்சியாகும்.

இந்தத் தொழில்நுட்பம் தற்போது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரத் துறையில் அந்தத் தொழில்நுட்பம், காசநோயை கண்டுபிடிக்கவும், எக்ஸ்ரே சாதனங்களிலும் முக்கியப் பங்காற்றுகிறது. அதேபோல் தொலைபேசி வழியிலான மருத்துவ சேவையை வழங்கும் ‘இ-சஞ்சீவினி’ போன்ற தளங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விவசாயம், சிறு குறு தொழில், சைபா் பாதுகாப்பு, நீதித் துறை, நிா்வாக அமைப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பம் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.