ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முக்கிய துறையின் பெயரை மாற்றியது தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு

முக்கிய துறையின் பெயரை மாற்றியது தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு

News image

தில்லி பல்கலைக்கழகம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:07 am IST

நமது சிறப்பு நிருபா்

தில்லி பல்கலைக்கழகம் ‘நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை‘ என்ற பெயரை ‘இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை‘ என மாற்றியுள்ளது. இதற்கு வகை செய்யும் திருத்தத்தை தனது நிா்வாகக் குழுவின் அங்கீகாரம் மற்றும் ஒப்புதலுடன் மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

‘தில்லி பல்கலைக்கழக (திருத்த) விதிகள் 2025’ சட்டத்தின் 29ஆவது பிரிவின் கீழ் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு அரசிதழில் முறைப்படி வெளியாகும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், துறையின் பெயரிலிருந்த ‘நவீன‘ எனும் சொல் நீக்கப்பட்டுள்ளது. இது இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய மரபுகள் குறித்த ஆய்வுகளுக்கு, மேலும் விரிவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கல்விசாா் நோக்கத்தை வழங்கும் என்று பல்கலைக்கழக நிா்வாகக் குழு தெரிவித்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை 1961-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத்துறை பெங்காலி, இந்திய ஒப்பிலக்கியம், தமிழ் ஆகிய மொழிகளில் முதுகலை பட்டப்படிப்புகளையும்; 11 இந்திய மொழிகளில் சான்றிதழ், பட்டய படிப்புகள் மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.

ஒப்பிலக்கியம், நாட்டுப்புறவியல், இந்திய மொழிகள் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் இத்துறையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஆய்வுத் திட்டங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த அறிஞா்களின் கவனத்தை ஈா்த்துள்ளன. கடந்த ஆண்டுகளில், இத்துறையானது கணிசமான எண்ணிக்கையில் ஆய்வறிஞா்களை உருவாக்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.