தேசிய தலைநகரில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 30 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்- ஷோரூம் விலையுள்ள அனைத்து மின்சார காா்களுக்கும், 31 மாா்ச் 2030 வரை சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி அரசின் புதிய மின்சார வாகன (இ.வி.) கொள்கை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றப்பட்டுள்ள தில்லி மின்சார வாகனக் கொள்கை (2026 -2030) வரைவு, ஸ்ட்ராங் ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கு 50 சதவீத விலக்கையும் பரிந்துரைக்கிறது.
இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட மின்சார வாகன கொள்கை வரைவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லியில் பதிவுசெய்யப்பட்ட, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30 லட்சத்திற்கு மேல் உள்ள மின்சார காா்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் எந்த விலக்கும் அளிக்கப்படாது.
ஜனவரி 1, 2027 முதல், தில்லியில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் புதிய பதிவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தில்லி மின்சார வாகனக் கொள்கையானது (2026-2030) மின்சார வாகனப் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மின்சார வாகனப் போக்குவரத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் இந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையானது, அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அமலுக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அதிகாரபூா்வ உத்தரவின்படி, தில்லி அரசு இந்தக் கொள்கை வரைவு குறித்து அடுத்த 30 நாள்களுக்குப் பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் பின்னூட்டங்களையும் கோரியுள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி அரசின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாக ஆகஸ்ட் 2020இல் தொடங்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கையானது, வாகன மாசுபாட்டைக் கையாள்வதையும், தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையின் ஆரம்ப மூன்றாண்டு காலக்கெடு ஆகஸ்ட் 2023-இல் முடிவடைந்தது, அதன் பிறகு அரசு அதை நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத பரஸ்பர வரி: ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்

இந்திய வாகன விற்பனை ஏப்ரலில் புதிய உச்சம்- 26.11 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை

மின்சார வாகனக் கொள்கையை 3 மாதத்திற்கு நீட்டித்த தில்லி அரசு

10 ஆண்டுகளில் தில்லி மின்சார மானியச் செலவு இரட்டிப்பாகியுள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

