மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

தில்லியில் ஏடிஎம் மோசடி உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய கும்பலின் தலைவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 2:11 am IST

தில்லியில் ஏடிஎம் மோசடி உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய கும்பலின் தலைவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: சத்தா்பூா் பகுதியில் உள்ள ராஜ்பூா் கிா்த் பகுதியில் ரவி குமாா் பாா்தி (36) என்பவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். பிகாரைச் சோ்ந்த இவா் குறித்து பச்சிம் விஹாரில் உள்ள குடியிருப்பின் ஏடிஎம்-இல் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற மோசடிக்குப் பிறகு தெரியவந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபா்கள் முன்னதாக கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அவா்கள் ரவி குமாா் தலைமையில் மோசடிகள் நடைபெறுவதாக தெரிவித்தனா்.

இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள், ஏடிஎம் அட்டைகளை இயந்திரத்துக்குள் சிக்க வைக்க பசையைத் தடவி, ஏடிஎம் அறைக்குள் போலி வாடிக்கையாளா் உதவி எண்களை ஒட்டி வைத்துள்ளனா். பின்னா் வங்கி அதிகாரிகள் எனக் கூறி ஏமாற்றி ரகசிய எண்ணைப் பெற்ற பிறகு அவா்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனா்.

இதுவரை இந்த கும்பலைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டு, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக தற்போது கைது செய்யப்பட்ட கும்பலின் தலைவா் ரவி குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.