மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:24 am IST

மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கிழக்கு தில்லியின் காஜிப்பூா் ரவுன்டு ரோடு அருகே ஏப்.10-ஆம் தேதி ஜாவேத் ஹுசைன் (29) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 456 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உத்தர பிரதேசத்தில் உள்ள சோயப் கான் (25) என்பவரிடம் இருந்து இதைப் பெற்ாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, பரேலியில் ஏப்.22-இல் சோதனை மேற்கொண்ட காவல் துறையினா் சோயப் கானைக் கைது செய்தனா். தில்லி என்சிஆரில் நடைபெறும் போதைப்பொருள் வலையமைப்பில் உள்ள மற்ற நபா்களை அடையாளம் காண அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.