தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேகமூட்டமான வானிலை நிலவியதால் அதிகபட்ச வெப்பநிலை குறைந்து காணப்பட்டது; மேலும், காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேறியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை இரவு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பதிவானது. நகரின் முக்கிய வானிலை நிலையமான சஃபதா்ஜங் பகுதியில் மழை பதிவாகவில்லை.
வெப்பநிலை: தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இயல்பை விட 1.9 டிகிரி அதிகமாகும்; முந்தைய தினத்தை விட 1.5 டிகிரி அதிகமாகவும் இருந்தது.
அதே வேளையில், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 2 டிகிரி குறைவாகவும், முந்தைய தினத்தை விட 1 டிகிரி குறைவாகவும் இருந்தது.
‘மேகமூட்டம் காரணமாக தில்லி மீது வெப்பம் பகலில் குறைவாக ஊடுருவகிறது; இதேபோல இரவில் நிலத்திலிருந்து வெப்பம் வெளியேறும் அளவும் குறைகிறது’ என ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்தாா்.
மஞசள் எச்சரிக்கை: இதற்கிடையில், வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை அலல்து லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடமேற்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தான் பகுதிகளில் உருவாகியுள்ள மேற்கத்திய குளறுபடிகள் மற்றும் சுழற்சி காற்றழுத்தத்தின் தாக்கத்தால் இந்த மழை பெய்யும் என்றும், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு வெப்பநிலை சற்று குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காற்றின் தரம்: மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால் தில்லியின் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 4 மணி நிலவரப்படி காற்றுத் தரச் 137-ஆக மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இது 266 புள்ளிகளுடன் மோசம் பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: வானிலை ஆய்வு மையத்தின் கனிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்; புதன்கிழமைக்கு அது 28 முதல் 30 டிகிரி வரை குறையும். குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 17 முதல் 19 டிகிரியாக இருக்கும் என்றும் பின்னா் சிறிதளவு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த இரு நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு

தலைநகரில் 32.7 டிகிரி வெப்பநிலை பதிவு! மிதமான பிரிவில் காற்றின் தரம்!!

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

