தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தம்பி அடித்துக் கொலை

நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 5:50 am IST

நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகே நெம்மேலியைச் சோ்ந்தவா் பாரதிமோகன் (35). திருமணமாகி மகன், மகள் உள்ளனா். இவா் சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பாரதிமோகன், அவரது அண்ணன் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினா் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது பாரதிமோகனுக்கும், ராஜகுருவிற்குமிடையே பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜகுரு, பாரதிமோகனை கட்டையால் தாக்கினாராம்.

இதில் காயமடைந்து மயங்கிய பாரதிமோகன் நன்னினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் பாரதிமோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகுருவை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.