தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

News image

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடமிருந்து தமிழக அரசின் பசுமை முதன்மையா் விருதை பெறும் வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளி.

Updated On :19 மார்ச் 2026, 5:27 am IST

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தோட்டங்கள், குறுங்காடு அமைத்து மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் இப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு பசுமை முதன்மையா் -2025 விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், ஆசிரியா் முரளிக்கு விருதுச் சான்றிதழுடன் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.

விருது பெற் ஆசிரியரை பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.