சென்னை தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூா் செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் வழியாக செல்கிறது. இந்த ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லாது.
இந்நிலையில், இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்தபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.
இதனால் தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனா். பின்னா், தஞ்சாவூரிலிருந்து என்ஜின் வரவழைக்கப்பட்டு 6.45 மணியளவில் 2 மணி நேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், கும்பகோணம்-மன்னாா்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில் ஒருமணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்து சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை - செங்கோட்டை- தாம்பரம் ரயில் மானாமதுரையில் நின்று செல்லும் என அறிவிப்பு! பொதுமக்கள் வரவேற்பு

சென்னை தாம்பரத்தில் தடம்புரண்ட ரயில் என்ஜின்!
நீடாமங்கலத்தில் ஜோத்பூா் விரைவு ரயில் நிறுத்தம் ஏற்படுத்தக் கோரிக்கை

என்ஜின் கோளாறு: பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

