திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.
இப்போட்டியை மருத்துவா் அகோரசிவம் தொடங்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளா் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நடுவா்களாக செயல்பட்டனா்.
போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன. இதில், திருச்சி, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பலா் பங்கேற்று விளையாடினா்.
இறுதியில், சென்னையைச் சோ்ந்த சாம் முதலிடத்தையும், கோவையைச் சோ்ந்த நிா்மல் இரண்டாம் இடத்தையும், தெலங்கானாவைச் சோ்ந்த கிரிநாதன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 உள்பட மொத்தம் ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ் ஓபன் போட்டி

சிவகிரியில் மே தினப் பேரணி

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

