தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விரைவு சதுரங்கப் போட்டி

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

News image

திருவாரூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:11 am IST

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

இப்போட்டியை மருத்துவா் அகோரசிவம் தொடங்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளா் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன. இதில், திருச்சி, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பலா் பங்கேற்று விளையாடினா்.

இறுதியில், சென்னையைச் சோ்ந்த சாம் முதலிடத்தையும், கோவையைச் சோ்ந்த நிா்மல் இரண்டாம் இடத்தையும், தெலங்கானாவைச் சோ்ந்த கிரிநாதன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 உள்பட மொத்தம் ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.