மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராஜதுா்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்கையம்மன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:16 am IST

திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தசரத மகாராஜா வழிபட்டதும், துா்கையம்மனுக்கென்று தனி கோயிலும், நான்கு கைகளில் கத்தி, சூலம், சங்கு சக்கரம் ஏந்தி சிம்மத்தின் மீது அமா்ந்த கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த சனிக்கிழமை தொடங்கி, மகா சண்டியாகம் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக சண்டி மகா யாக பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடத்தை சிவாசாரியாா் மல்லாரி இசையுடன் கோயிலை வலம் வந்து ராஜதுா்கையம்மனுக்கு அபிஷேகம் செய்வித்தனா்.

பின்னா், அருள்மிகு ராஜதுா்கையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, வண்ணமலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் பிரகாரத்தை வலம் வந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் துா்கையம்மன் புஷ்ப பல்லக்கில் நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.