தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாரூா் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடிகள்

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:18 am IST

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,271 வாக்குச்சாவடிகள்: திருவாரூா் 327, திருத்துறைப்பூண்டி (தனி) 293, மன்னாா்குடி 307, நன்னிலம் 344 என 1,271 வாக்குச் சாவடிகள் தயாா்நிலையில் உள்ளன. இதில், 54 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருவாரூா் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 392, விவிபேட் 425), திருத்துறைப்பூண்டி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 351, விவிபேட் 380), மன்னாா்குடி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 368, விவிபேட் 399), நன்னிலம் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 412, விவிபேட் 447) என வாக்குப்பதிவுக்கென 4,697 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: இதனிடையே, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.