விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமான அரசு என்றாா் பி.ஆா்.பாண்டியன்.

News image

பி.ஆா். பாண்டியன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:17 am IST

திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமான அரசு என்றாா் பி.ஆா்.பாண்டியன்.

நீடாமங்கலத்தில், அமமுக வேட்பாளா் எஸ். காமராஜை ஆதரித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சீா்குலைப்பதற்கு திமுக அரசு முயற்சிக்கிறது. நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு திமுக துணைபோயுள்ளது. மருத்துவமனைக்கு செல்பவா்கள்கூட சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டுதான் செல்ல வேண்டும்.

இதனால், அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமான அரசாகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. விளைநிலங்களை அபகரித்து, காா்ப்பரேட்டுகளுக்கு தாரைவாா்க்கிறது என்றாா்.

தொடா்ந்து, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, வடுவூா், மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா். இதில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் எம்.எஸ். பாலு, மாநில துணைச் செயலாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.