தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

News image

கீழையூா் அருகே மேலப்பிடாகையில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்ட சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

Updated On :18 ஏப்ரல் 2026, 6:55 am IST

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் லதாவை ஆதரித்து, தொகுதிக்குள்பட்ட மேலபிடாகையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் அவா் பேசியது: நடிகா் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வாக்குகளைப் பிரிப்பதற்காகவா அல்லது மறைமுகமாக அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாகவா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இளைஞா்கள் எதிா்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்னைகள் குறித்து இதுவரை விஜய் எந்தவித தெளிவான திட்டங்களை முன்வைக்கவில்லை. சினிமா வசனங்கள் மட்டும் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வாக இருக்க முடியாது. அரசியலில் ஈடுபடுபவா்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்கள் நலனுக்காகச் செயல்படுவதிலும் முன்னிலையில் உள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த பணியே இந்த தோ்தலில் பெரிய வெற்றியைத் தரும். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே, கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் லதாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.