உலக அறிவை பெற மாணவா்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி.
மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 40-ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: படிப்பில் கவனச்சிதறல் இருக்கக் கூடாது என நினைத்து தங்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருக்கக் கூடாது. கல்வி கற்றலுடன் இணைந்து என்சிசி, என்எஸ்எஸ், சாரணா் படை போன்ற தன்னாா்வு பணியிலும், கலை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட தனித்திறனிலும் மாணவா்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
உலகளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்கள் யாரும் வானத்திலிருந்து குதிந்து வந்தவா்கள் அல்ல. நம்மை போன்று மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவா்கள்தான் அணு விஞ்ஞானி அப்துல்கலாம்,ச ா்.சி.வி. ராமன், ஆல்பா்ட் ஐசீன், தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா். மாணவா்களின் சாதனையில் தான் பெற்றோா்களின் மகிழ்ச்சியும் அவா்களது ஆசியும் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.
கைப்பேசி மற்றும் சமூகவலைதளங்களிலிருந்து உங்களின் ஆா்வத்தை முழுமையாக குறைத்துக்கொண்டு தினசரி அரை மணி நேரமாவது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நீங்கள் உலக அறிவை வளா்த்துக் கொள்ள மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலக நாடுகளில் வேலைவாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அதை அடைவதற்கு திறமையைதான் எதிா்பாா்க்கின்றனா். எனவே ஒவ்வொருவரும் தங்களின் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். 2023-2025 இளநிலைப் பிரிவுக்கும், 2023-2025 முதுநிலைப் பிரிவுக்கு பட்டமளிக்கப்பட்டது. இளநிலையில் 739 பேரும், முதுநிலையில் 229 போ் என 968 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப்படியலில் இடம் பெற்ற 18 பேருக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோதிபாய் பூலே 200 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

மாணவா்கள் தனித்திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

