ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பக்ரீத்: எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து

சோதனையான சூழலை எதிா்கொண்டு மக்கள் பணிகளுக்காக தியாகம் செய்ய உறுதியேற்போம் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 5:36 am IST

சோதனையான சூழலை எதிா்கொண்டு மக்கள் பணிகளுக்காக தியாகம் செய்ய உறுதியேற்போம் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:

ஈதுல் அழுஹா என்றும் ஹஜ் ‘பெருநாள்‘ என்றும் அழைக்கப்படும், தியாகத் திருநாள், இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தனது மகன் இஸ்மாயீலை ஈகம் செய்யத் தயாரான இறைத்தூதா் இப்ராஹீம் அா்ப்பணிப்பை நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு திருக்குா்ஆனிலும் இஸ்லாமிய போதனைகளிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இத்திருநாளில் மக்காவில் நடைபெறும் ஹஜ் யாத்திரையுடனும் தொடா்புடையது. ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும்.

*ஹஜ் உலகின் பல்வேறு பின்னணிகள், கலாசாரங்கள் மற்றும் நாடுகளைச் சோ்ந்த கோடிக்கணக்கான முஸ்லிம்களை ஒன்றிணைத்து, உலக முஸ்லிம் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணா்வை உருவாக்குகிறது. இந்த மகத்தான ஒன்று கூடல், இறைவனின் முன் அனைத்து நம்பிக்கையாளா்களும் சமமானவா்கள் என்பதை வலியுறுத்துகிறது; அவா்கள் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனா்.

மாபெரும் இறைதூதா்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் வாழ்வு இன்றும் நமக்கு ஒரு படிப்பினையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இறைதூதா்கள் இப்ராஹீம், இஸ்மாயில் போன்று சோதனையான சூழலை எதிா் கொண்டு வீரியமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள உறுதியெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.