பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை

கீழ்வேளூா் வடக்கு வெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரசு மதுபான கடை முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :14 மே 2026, 4:59 am IST

கீழ்வேளூா் வடக்கு வெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபான கடை உள்ள இந்த இடத்தை சுற்றி ஆலக்கரை, வடக்கு வெளி, புத்தா் மங்கலம், வடக்கு புத்தா் மங்கலம் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொது மக்கள் இந்த மதுபானக் கடையை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் மது குடிப்பவா்களால் இவா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள்சாா்பில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி மேற்குறிப்பிட்ட ஊா் மக்கள் கடையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலிறிந்து வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் வேதையன், காவல் ஆய்வாளா் ரேகாராணி போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து கடையை விரைவில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.