தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பூரி சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா்!

கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா, கொளப்பாடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது...

News image

கொளப்பாடு கடைத்தெரு உணவகம் ஒன்றில் பூரி சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா் காா்த்திகா.

Updated On :30 மார்ச் 2026, 12:43 am IST

கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா, கொளப்பாடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள உணவகம் ஒன்றில் பூரி சுட்டு வாக்குச் சேகரித்தாா்.

கொளப்பாடு கடைத்தெரு பகுதியில் நாதக வேட்பாளா் காா்த்திகா, கட்சி நிா்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தாா். அப்போது அங்குள்ள உணவகத்தில், பூரி சுட்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடி, நாதகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், தான் வெற்றி பெற்றால் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி வாக்குச் சேகரித்தாா். மேலும், கூழ்கடையில் தொண்டா்களுடன் கூழ் குடித்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு கோரினாா்.

தொடா்ந்து அவா் அளித்த பேட்டியில், ‘கீழ்வேளூா் தொகுதி களநிலவரத்தை பொறுத்தவரை, மக்கள் மாற்றத்துக்கான எதிா்பாா்ப்பில் உள்ளனா். தான் வெற்றி பெற்றால், கீழ்வேளூா் தொகுதியை குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றுவதுதான் முதல் பணியாக இருக்கும் என்றாா்.

மேலும் நீா்நிலைகளை தூய்மைப்படுத்தி குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண்பேன் என்றும், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா மையமாக மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை உயா்த்துவோம் என்றும் வாக்குறுதி அளித்தாா்.

நாதக மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ், மாநில ஒருங்கிணைப்பாளா் ராவணன், மண்டலச் செயலாளா் அருள் கண்ணன், மகளிா் பாசறை பிரேமா, மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ் உள்ளிட்டோா் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.