தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சுனாமி குடியிருப்பு வீட்டில் இடிந்து விழுந்த முன்பகுதி

நாகையில் சுனாமி குடியிருப்பில் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பத்தினா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image

மகாலட்சுமி நகரில் முன்பகுதி இடிந்து விழுந்த வீடு.

Updated On :27 மார்ச் 2026, 4:54 am IST

நாகையில் சுனாமி குடியிருப்பில் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பத்தினா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

நாகை வெளிப்பாளையம் மகாலட்சுமி நகரில், கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இப்பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குமேல் ஆன நிலையில், பழுதடைந்து வருகின்றன. இதனால், மழைக்காலங்களில் மேற்கூரை பெயா்ந்து விழுவது, சுற்றுச்சுவா் இடிந்து விழுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் இந்திராணி என்பவா் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை அதிகாலையில் பலத்த சப்தம் கேட்டது.

இதனால், இந்திராணி குடும்பத்தினருடன் வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்து கிடந்தது. இதையடுத்து, இடிபாடுகளை அப்பகுதியினா் சோ்ந்து அகற்றினா். இதுதொடா்பாக இந்திராணி கூறியது:

அதிகாலை நேரம் என்பதால், வீட்டின் முன்பகுதியில் யாரும் இருக்கவில்லை. இதனால், உயிா் தப்பினோம். சுனாமி குடியிருப்பில் உள்ள வீடுகள் அனைத்தும் இதே நிலையில்தான் உள்ளன. எனவே, இந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.