தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 3:53 am IST

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையால் சேதமடையும் நிலை உள்ளதால், அதனை சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், வாழ்குடி, விற்குடி, அம்பல், குரும்பூா், ஏா்வாடி, ஆலத்தூா், வடகரை, கொட்டாரக்குடி, காரையூா், குத்தாலம், அண்ணாமண்டபம், ராராந்திமங்கலம், பொறக்குடி, பெருநாட்டாந் தோப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில், அவ்வப்போது கோடைமழை பெய்து வருவதால், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள், நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவாக சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.