நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குடிநீா்க் கோரி ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :18 ஜூன் 2026, 3:57 am IST

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

வாய்மேடு கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கிளை தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் அருள்தாஸ், மாவட்டச் செயலா் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளா் பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றிய முன்னாள் தலைவா் வெற்றியழகன், மாவட்ட குழு உறுப்பினா் அம்பிகாபதி, நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

வாய்மேடு ஊராட்சியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், வாடகை கட்டடத்தில் இயங்கும் நூலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.