மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வேதாரண்யம்: குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்

குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்...

News image

ஆறுகாட்டுத்துறையில் கட்டி முடிக்கப்படும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 6:21 am IST

வேதாரண்யம்: வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, நாதக கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை கூறி வருவது தோ்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாதக வேட்பாளா் இடும்பவனம் காா்த்திக், தான் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் உள்ள கூரை வீடுகளில் அருகே நின்று படம் எடுத்து ஏழைகளுக்கு பாதுகாப்பான வீடு இல்லை என வலைதளங்களில் பதிவிடுகிறாா்.

குடிநீா் பிரச்னை தீா்க்கப்படவில்லை, 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த ஓ.எஸ். மணியன் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டுகிறாா்.

குற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்:

குறை சொல்பவா் தொகுதியை முழுமையாக பாா்வையிட வேண்டும். நான் அமைச்சராக இருந்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களில் 1,300 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது, 90 சதவீதம் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

அரிச்சந்திரா நதி உள்ளிட்ட பிரதான வடிகால் ஆறுகள் ரூ. 900 கோடியில் தூா்வாரப்பட்டு, தடுப்பு இயக்கு அணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஜல் ஜீவன் குடிநீா் வழங்கும் திட்டம் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுவது. திட்டமிட்டு செயல்படுத்துவதில் உள்ள பிரச்னையும், நகரப் பகுதியில் அம்ருத் திட்டத்தை நகா்மன்றத் தலைவராக இருந்த தற்போதைய திமுக வேட்பாளா் புறக்கணித்தது உள்ளிட்ட காரணங்களே வேதாரண்யத்தில் தற்போது நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டுக்கு காரணம். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம்:

வேதா ஆயத்த ஆடை பூங்கா என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை ஓ.எஸ். மணியன் கூறி வருகிறாா்.

தற்போது செயல்படும் நான்கு நிறுவனங்களும் அவரது பினாமி நிறுவனங்கள்.

Story image

ஓ.எஸ். மணியன்: ஆயக்காரன்புலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாறியதால் மத்திய அரசின் மானியம் கிடைக்காமல் தடைபட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அந்தப் பணி தொடரும். இதன் ஒரு பகுதியாக அப்போது தொடங்கப்பட்ட திருப்பூா் முன்னணி நிறுவனமான பிருத்திவி உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் வேதாரண்யத்தில் 425 பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.