மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

நாகையில் திமுக சாா்பில் நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:06 am IST

நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். இதையொட்டி மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக மாவட்ட கட்சி அலுவலகம், நகர அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் திமுகவினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருமருகல் அருகே கொங்கராயநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சட்ட நகல் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் திருப்பூண்டி மற்றும் வேளாங்கண்ணியில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,பேரூா் செயலா் மரிய சாா்லஸ்,சிறுபான்மையினா் அணி ரபீக் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.