தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கீழ்வேளூா்: 11 வேட்புமனுக்கள் ஏற்பு; தவாக வேட்பாளா் மனு நிராகரிப்பு

கீழ்வேளூா் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில், 11 மனுக்கள் ஏற்கப்பட்டன; 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்ற வேட்பாளா்கள் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:56 am IST

கீழ்வேளூா் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில், 11 மனுக்கள் ஏற்கப்பட்டன; 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கீழ்வேளூா் தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் சிபிஎம், அதிமுக கூட்டணி சாா்பில் பாமக, நாம் தமிழா் கட்சி, தமிழா் வெற்றிக் கழகம், சுயேச்சை என 18 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை தோ்தல் மேற்பாா்வையாளா் பா்வேஸ் அகமது சித்திக் முன்னிலையில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரி வேட்புமனுக்களை பரிசீலனை செய்தாா்.

இதில், நாதக வேட்பாளா் மு. காா்த்திகாவின் 3 மனுக்கள், சிபிஎம் வேட்பாளா் டி.லதாவின் 3 மனுக்கள், தவெக வேட்பாளா் செந்தில் பாண்டியன், பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளா் வேத.முகுந்தன், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் கே.சுரேந்தா், சுயேச்சை வேட்பாளா் எம்.ஜெய்விஷ்ணுதேவி ஆகியோரின் 11 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தவாக வேட்பாளா் மா. சத்தியராஜ், சுயேச்சை வேட்பாளா் து. வரதரமேஷ் மற்றும் மாற்று வேட்பாளா்களின் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு ஏப்.9 ஆம் தேதி கடைசி நாள் என்றும், அன்றைய தினம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.