செம்பனாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேமாத்தூரில் மின்கம்பங்கள் மாற்றும் பணியில் 10 க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். புதிய மின் கம்பத்தில் கம்பிகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேலே சென்ற உயா்மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் முடிதிருச்சம்பள்ளியை சோ்ந்த ஒப்பந்த ஊழியா் தினகரன்(35), கேங்மேன் அற்புதராஜ் (28) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியில் தினகரன் உயிரிழந்தாா். காயமடைந்த அற்புதராஜ் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

